Wednesday, November 12, 2008

" கடன் "

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...

பாட்டியும் நல்ல சுகம். சென்ற முறை உங்களுக்கு " மனஅழுத்தம்" பற்றி அழுத்தி அழுத்தி சொன்னனான் தானே. இந்த முறை " கடன் " பற்றி எடுத்துவிடலாம் என்று இருக்கிறேன்.

அப்பப்பா பொல்லாத சொல்லப்பா இது. வேண்டியவனும் நின்மதியாய் இருந்ததில்லை, கொடுத்தவனும் நின்மதியாய் இருந்ததில்லை. அப்ப என்னதான் செய்யலாம், வேண்டாமல் விடுவதா??? அல்லது கடன் கேட்டாலும், உயிர் போனாலும் கொடுக்காமலே விடுவதா..???

இல்ல அப்படியான எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. மற்றவர்களின் அவசரதேவைக்கு எங்களிடம் இருப்பதை கடனாக கொடுப்பதால் அதை பெற்றுக் கொண்டவன்மட்டுமன்றி அதனால பிரையோசனப்பட்டவர்களும் உங்களை, எங்களை வாழ்த்துவார்கள். ஆனால் யாரை நம்புவது பணத்தை
வேண்டிக்கொண்டு எஸ்கேப்பானால் என்ன செய்வது..? என்று நாங்கள் யோசிக்கதான் வேண்டும்.


இதுவரையில் யாருக்காச்சும் கேட்டவரம் அத்தனையும் தெய்வம் கொடுத்திருக்கா..? இல்லைத்தானே..அதுபோலத்தான் இதுவும் நாம நம்பிக்கை வைக்கிறோம் கொடுக்கிறோம். அந்தக் கடன் திரும்ப நமக்கு கிடைத்தால் கண்டு கொள்ளவேண்டியதுதான். அப்படி கிடைக்காவிட்டால்....நன்னா அவங்களை சபிச்சுட்டு இருக்கவேண்டியது தான்.

ஆனா ஒரு விசயம்...கடன் வேண்டினவங்கதான் இதில மனிதநேயத்துடன் நடக்கவேண்டும். தங்கள் தேவைக்கு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி காரியத்தை பெறுவார்கள், அதன் பின்பு சண்டைக்கு நிற்பார்கள். வேண்டினான்தான்....இப்ப அதற்கு என்ன வசதிவரும் போது தரலாம் என்பார்கள். ( எல்லோரும் அப்படியில்ல பாருங்கோ.)

நாம சாப்பிடும் பழத்தை சாப்பிட்டு அறிந்து கொள்ளலாம், புளிப்பா, இனிப்பா, கசப்பா என்று.ஆனா......பாருங்கோ...இப்படியான யோக்கியன் மாதிரி நடக்கும் அயோக்கியவன்களை பழகினாலும் அறியமுடியாது. பொதுவா மனிதரை அறியவே முடியாது..

இப்ப நான் என்ன சொல்ல வாறன் என்றால்.......கடன் வாங்குவதில் இருக்கிற பக்குவம், நேர்மை, விசுவாசமான பேச்சு, எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றதிலும் இருக்கவேண்டும். அப்படித்தவறின் உரியவர்களிடம் உங்கள் கஷ்ட நிலமைகளைச்சொல்லி தவணை கேட்கவேண்டும். இதுவே மனிதநேர்மை.

என்ன பிள்ளைகளே உங்களில் யாருக்காச்சும் இந்த கொடுக்கல் வாங்கல், பிச்சல் புடுங்கல் அநுபவம் இருக்கோ...
அப்ப சரி பிள்ளைகள் நானும் போயிட்டு வாறட்டோ...கனக்க எழுதிப்போட்டன் போலயிருக்கு..

இருக்கிற பொழுது எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்.

டாட்டா



நிலம் பார்த்து நாற்று நடு
நல்ல மனம் பார்த்து கடன் கொடு.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: