Friday, November 14, 2008

"ஏமாற்றுதல்"

சரி....யாருக்கும் எந்தக்குறையும் ஏற்படாதவாறு இன்று " ஏமாற்றுதல்" பற்றி என் அறிவிற்குத் தெரிந்த அறிந்த விடயங்களைப்பற்றி எழுதுறேன் பாருங்க.

இந்த உலகமே ஒரு ஏமாற்றுவிதம்தான். கள்ளம் கபடமில்லாத குழந்தைக்குக்கூட தாய் நிலாவைக்காட்டி, ஏமாற்றிச் சோறு ஊட்டுவாள். நித்திரைக்குப்போனால் அங்கேயும், பொக்காண்டி வா...வா...பிள்ளை நித்திரை கொள்ளேல்ல வந்து புடிச்சுக்கொண்டு போ.போ.

ம்.....ஆச்சா...
அப்புறம் பாடசாலையில ஆசிரியரை ஏமாற்றுவது. ஆனா இதுவெல்லாம் யாரையும் பெரிசா பாதிக்காது. அது அவனோடையே போயிடும். ஆனா மனுசனாகிட்டா சில ஜென்மங்கள் செய்கிற வேலையிருக்கே இதுகளும் வாழவேண்டுமா என்றிருக்கும்.

இப்படியே வளர்ந்து ஒன்று நன்மை அடையவேணும் என்பதற்காக இன்னொன்று ஏமாற்றிவாழுவது. இது அன்றுதொட்டு காணுகிறோம். சரி....அதையாவது பொறுத்துக்கொள்வோம். ஆனா பாருங்க..

மனிதன் என்று 2 கையும், 2 காலும், முழுசான உருப்படியா பிறந்தும் அழுக்கான மனசா வாழுறாங்களே சிலபேர்கள்.....அவங்க செய்கிற ஏமாற்றுத்தனமிருக்கே மன்னிக்கமுடியாதது. நிச்சயமாகச் சொல்லுவேன். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில அவன் அநுபவிச்சிருப்பான் அந்த ஏமாற்றத்தை.

அது காதலாக இருக்கட்டும், ஏன் அப்படி.? இப்படிச் சொல்வோம், பொன், பொருள், பெண், ஆண் இதில எதுவானாலும் அவன் பாதிக்கப்பட்டிருப்பான். இந்த ஏமாற்றம் தனிய ஏமாற்றம் இல்லை. இதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு. அதுதான் " நம்பிக்கைத்துரோகி"

இவற்றை எவ்வாறு இனங்காணுவது..? முடியாது முடியவேமுடியாது. நமக்கு அநுபவம் என்று ஒன்று வந்தால் மாத்திரம் காணலாம். அடுத்ததடவை உசாராகயிருக்கலாம். தலைமுட்டிய பின்புதான் புரியும், பதிவான நிலையின் கட்டிடம். அடுத்ததடவை...நாம பார்த்துப்போயிடமாட்டோமா என்ன..?

ஒரு உண்மைச்சம்பவம்

ஊரில ஒரு சாப்பாட்டுக்டை ( ஹொட்டல்) வைத்திருக்கும் முதலாளி அவர். காலையில கடைதிறந்து அப்பனே முருகா, அல்லாஹ், அந்தோணியாரே என்று சகலரையும் பெரிசா மாட்டி ஆகவேண்டியவகைளைச் செய்து, தடித்த ஒற்றை திருநீறுடன் நடுவில ஒரு குங்குமமு்ம் சந்தனமும் கலந்த நச்சுன்னு ஒரு பொட்டு.

ஊரில செல்வாக்குதான். ஆமியென்ன, போலீஸ் என்ன? அனைவரும் அவருடைய சொல்லுக்கு அலுவல்நடக்கும். ( லஞ்சம் கொடுத்தாதானப்பா.. )
அதே ஊரில இந்த ஓனருக்கு ஒரு சொந்தம் மாமா என்று அழைக்கப்படும் அவருக்கு, காணிப்பிரச்சனை. இக்கட்டான சூழ்நிலை. இன்ஸ்பெக்டருடன் பேசவேணும். அயலவர்களால வாய்த்தர்க்கம் வேறு பிரச்சனை. நம்மாளு ஓனர் இதுக்கெல்லாம் தலையைக் காட்டமாட்டார். ஆனாலும் மாமா விடுவதாகவில்லை. ஒரே பிடியாய் ஒனரை பிடித்துக்கொண்டார். சரி நாளைக்கு 2 பெரும் போய் இன்ஸ்பெக்டரை சந்திப்போம் என்று சொல்லிவிட்டார். மாமாவும், காலை 7 மணி தொடக்ம் 1 மணி வரை பார்த்தார். ஓனர் வரவேயில்ல. மாமாவிடம் ஒரு டப்பான் சயிக்கிள் வேறு அதையும் உதைஞ்சு உதைஞ்சு கடைக்குப்போய்ப்போய் ஏமாற்மாக வந்தார். கல்லாபெட்டி ( காசுவேண்டும் இடம்) அருகில் அவரிடத்தில் வேறு ஒருவர். ஐயா இன்னும் வரல்லை ஐயா. இதுதான் பதில்.( கல்லாபெட்டிக்கு எதிராக டீ போட்டுக்கொடுக்கும் இடம். எல்லாமேகடை வாசல் அருகில்தான்.)

மாமாவிற்கு வஞ்சகமில்லாத மனசு. அட என்னதான் இவனுக்கு நடந்தது என்று மனசுக்குள்ள படபடப்பு.

சரி......என்றிருக்க...நம்மப்போல ஒன்று மாமாவிற்கு பிரையின்வோஷ் பண்ணிச்சு. மாமா அதுபோலவே வழமையாகப்போகும் நேரான பாதையில செல்லாம அடுத்த ரோட்டால சுற்றி வர நேரே கல்லாப்பிட்டியில ஹி.......என்ற படி ஓனர். அட மாமாவா வாங்க! வாங்க! பாலு.மாமாவிற்கு சூடா ஒரு கப் பால். என்றபடி..

சரி....அதற்கு பிறகு உங்களுக்குப் புரிந்திருக்கும். இதில பாருங்க.ஓனருக்கு டிப்ஸ் கொடுப்பது அந்த டீ ஆத்தும் பாலுதான்..மாமாவின் சயிக்கிள் நேர வர அவர் அங்க வாறார் மாமா என்று சொல்ல....இவர் ஓனர் கதிரைக்கு கீழே தலையை மட்டுமல்ல உடம்பையும் வளைச்சு திணிக்க...அந்த இடத்தில வேறு ஒருவர் பதில் சொல்ல.......பிறகு மாமா போக ஓனர் தலையை நிமிர்த்த இப்படியே 4, 5 தரம் நடந்துவிட்டது. மாமா எதிராகப்போனபோது அவரால எதுவும் செய்யமுடியவில்ல...வசமா மாட்டு.

பாருங்க...இப்படியெல்லாம் தேவையா..? நாம யாரையும் ஏமாற்றிப் பிழைக்கும் மட்டும், நாமக்கு நாமே சாவுக்குழி தோண்றுவது போலாகும்.
திருமணம் முடித்த ஆணோ, பெண்ணோ தங்களை மணமுடியாதவர்களாக ஏமாற்றுவது, எதுக்கெடுத்தாலும் பொய்பேசி அடுத்தவர்களை ஏமாற்றி தன்வலையில விழவைப்பது. இது நாட்டிற்கு நாடும் தொடர் சங்கிலியாக வளர்ந்து கொண்டுவருகின்ற கொடிய வைரஸ்.

முடிந்தவரையில அடுத்தவரைப் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதை விடுத்து....
அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் ஏமாற்றுங்கள். ( அதாவது ஒரு லீவு எடுக்கவேணும் பொய்யான தகவல் கொடுத்தால்தான் தருவார்கள் என்றிருந்தால்...இப்படியான சொந்தத்தேவைகள்..)
அடுத்தவரை ஏமாற்றாமல் முடிந்தவரையில் உண்மைபேசி வாழ்வோமாக.


" சிலபேரை சிலகாலம் ஏமாற்றலாம்"

"பலபேரை பல காலம் ஏமாற்றலாம்"

" எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றமுடியாது."


விடிகின்ற பொழுது எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும். என்று கூறி அனைவருக்கும் டாட்டா...



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com