Wednesday, January 14, 2009

"நம்பிக்கை"

சென்ற பதிவில் "நண்பர்கள்" என்ற விடயத்தோடு உங்களைச் சந்தித்தேன். இன்று கிளிக்காகியது. "நம்பிக்கை" என்றதை எழுத வேண்டும் என்று. அதனால உடனே வந்துவிட்டேன்.

" நம்பிக்கை" அப்படி என்றால் என்னங்க..? மனுசன் மேல மனுசன் வைக்கிற நம்பிக்கை. வாங்கிற பொருளில் நாம வைக்கிற நம்பிக்கை. காதலன், காதலிமீதும், கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மனைவி மீதும் அட இரண்டும் சேம் தாங்க மேட்டருக்கு வாங்க என்று யாரோ திட்டித்தீர்ப்பது போல என் ஞானம் சொல்லுறாள். அதுயாருங்க புதிசா ஞானம். அது யாரோ யாருக்குள் யாரோ...பாடல் போலத்தானுங்க..

அதெல்லாம் கடந்ததுதான் "நம்பிக்கை" நாம வைக்க வேணும் நம்பிக்கை அது நம்ம வாழ்விலேதான் இருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையில் வைக்க வேணும். அது எப்படியங்க..?
நாளைய வாழ்வு யாருக்குத்தெரியும்..? விடியும் பொழுது யாருக்குமே தெரியாது. ஆனால் நாம் நம்பிக்கையோடு தூங்கி எழும்புகிறோம். மறுநாள் எழும்புவோம் என்ற நம்பிக்கையோடு. நாளை அந்த வேலை, இந்த வேலை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை எமக்குள் யாரும் சொல்லாமலே எமக்குள் ஏற்படுக்கின்ற நம்பிக்கையது.

இதெல்லாம் கடந்து நாம கடவுளிடத்தில வைக்கிறோம் நம்பிக்கை. எந்த மதமாகயிருந்தாலும் அந்தந்த சீசனுக்கு அவரவர் தெய்வங்களுக்கு எப்படியெல்லாமோ தம்மை அன்போடு வருத்தி நோன்புயிருந்து ஏதோ ஒரு வகையில தனக்கு நல்லது நடக்கவேணும், தன் குடும்பத்திற்கு நல்லது நடக்கவேணும் என்றெல்லாம் மனுசன் நம்பிக்கை வைக்கிறான்.

அதுவும், மற்றவரையும், தன்னையும் பாதிக்காதவகையில அதுவும் நல்லதுதான். இதற்கு உதாரணமாக ஒரு கதை. என்னோட அநுபவமில்லையப்பா. எங்கையோ எப்போதோ படிச்ச அநுபவம். யாவரும் அறிந்த கதையும் கூட.

பெரிய சபையின் நடுவே பாஞ்சாலியின் சேலையை அப்படியே துச்சாதணன் துகிலுரிகிறார். அப்போது பஞ்சாலி ஐயோ, ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தி கதறுகிறாள். அங்க பாருங்க ஆயிரக்கணக்கானவர்கள், அதில மேதாவிகள், அரசர்கள், பஞ்சாலியின் கணவர்மார்கள் எல்லோரும் இருக்க ஒரு பெண்ணுக்கு சேலை உரியும் போது எவ்வளவு அவமானம். அந்த நேரத்தில ஏன் உடனே கண்ணன் உதவி புரியவில்லை. பஞ்சாலி பேர் சொல்லி கூப்பிடும் வரையில ஏன் அட்டேன்ஷனில இருந்தார்..? யோசிச்சுப்பாருங்க..

ஏன் என்றால் அப்போது பஞ்சாலி தன் மானத்தை இருகைகளாலும் பொத்திக் கொண்டு இருந்து கத்தியிருக்கிறாள்.( நான் பார்த்தனாக்கும் என்று கேட்டுவிடாதீர்கள்..) கண்ணன் என்ன நினைச்சிருக்கிறார். அட அவளுக்கு நம்பிக்கையிருக்கு..தன் மானத்தை தான் காப்பாற்றுவேன் என்று.....அதனால அவரும் பார்வையாளர்களோடு இருந்துவிட்டார். அப்புறமா பாருங்க பாஞ்சாலி கண்ணா கண்ணா என இரண்டு கைகளையும் மேலே தூக்கி கத்தியிருக்கிறாள். அது எதனால கண்ணன் மேலயிருந்த நம்பிக்கையினால. தன்னையும் மறந்து ஆண்டவனிடத்தில முழு நம்பிக்கை வைக்க....( இப்பவுள்ள படத்தில, ஹீரோயினி ஊட்டியிலயிருந்து கண்ணா, கண்ணா என்று கத்தினால் ஹீரோ மதுரையிலிருந்து பல்ட்டி அடிச்சே ஒரு செக்கனில வந்திடுவார்.. )

ம்.....ரொம்ப ஸ்பீடா அந்தச் சேலை அவள் மானத்தைக் காக்க இப்பவுள்ள நாக்க மூக்க பாடல் ஸ்பீடுபோல குசேலன் சேலை, ரம்பா சேலை, பவனா சில்க் சேலை இப்படியாக தொடரா கலர் கலரா வந்திச்சு. (நிஜவாழ்க்கையில இப்படி நடக்குமாங்க..??? ம்ஹும் ச்சான்சேயில்ல.. )(துச்சாதணன் எதற்கு இப்படி திரெளபதியை ஆயிரக்கணக்கானோர் மத்தியில இப்படிக் கேவலப்படுத்தினார் என்றதிற்குக் கூட கதையிருக்கு. அதை இதற்குள் ஜொயின்ட் பண்ணினால் அப்புறம் நம்பிக்கை சப்ஜெக்ட் மாறிப்போயிடுமுங்க. அதனால அதை வேறு ஒரு பொழுது பார்த்துக்கொள்வோம்.)

பாருங்க நாம முழு மனதோடு நம்பவேணும். நம்பிக்கைவேணும். நிச்சயம் அது பிரதிபலிக்கும். நாம சாதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதிலும் பார்க்க செயலாற்றிக்கொண்டுடிருந்தால் அதில் நாம வைக்கும் முழு நம்பிக்கை வீண்போகாது.. எல்லாமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலதான் வாழுறோம். நாளைய நாளே நம்பிக்கையில்தானுங்க...

அப்புறம் இந்த நம்பிக்கைக்கு இன்னொரு உதாரணம்.

யாருக்காவது போர் அடிச்சா தயவு செய்து எடுத்துச் சொல்லுங்க....என்னை நானே மாற்றியமைச்சு எழுத முயற்சி செய்வேனுங்க..ம்.....கதைக்கு வருகிறேன்..

நடு ரோட்டில ஒரு பெரிய அக்ஸிடென்ட்...அந்த பஸ்சில வந்தவங்க பாதிக்கு மேற்பட்டவங்க இறந்திட்டாங்க....அங்க வந்த உதவிப்பிரிவினர் அரைகுறையாகயிருந்த உயிரோடிருந்தவங்கள மட்டும் தூக்கி ஆம்புலன்சில ஏற்றி அது வெளிக்கிட்டுப் போக ஆயத்தம். அப்ப பார்த்து ஒரு மனுசனை இவங்க இறந்திட்டாரு என்று விட்டிட்டுப் போன அவரு எழும்பி நின்று தன் சேர்டைக் கழற்றி தலையில கட்டுப்போட்டு கத்தியிருக்கிறாரு......( படக்கதையில்லங்க.நிஜக்கதை) உடனே அவரு காப்பாற்றப்பட்டார்...அவருக்குள்ள நம்பிக்கை தன்உயிரையே காப்பாற்றவைத்தது. இதுபோல 2 கைகளையும் இழந்த பெண், கால்களை இழந்தவங்க, இன்னும் நிறையப்பேர் யூனீயரிலிருந்து சீனியர் வரைக்கும் இப்படிப் பல பேர்களுடைய வாழ்க்கை எனும் சக்கரம் சுழன்று கொண்டிருப்பதே தளராத "நம்பிக்கை" யின் அடிப்படையில் தானுங்க..

ஆகவே நம்புங்க...வாழ்க்கையில துன்பம் வரும்போது ஏற்றுக்கொள்ளுங்க...அது கூட அநுபவத்திற்கு ஒரு பாடம்..இன்பம் வரும்போது மகிழ்ந்திருங்க...அடச்சே என்னடா வாழ்க்கை என்று எண்ணாதீங்க...நம்பிக்கையோடு வாழுங்க...வளமான வாழ்வு உங்கள் அருகில்தானுங்க.

அதுவரை டாட்டா
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9514

நல்ல நண்பர்கள்

நீண்ட மாத இடைவெளியின் பின்பு பாட்டி உங்களை "நண்பர்கள்" என்ற தலைப்பில் சந்திக்க வந்துள்ளேன்..

நண்பர்கள் என்றதை நாங்க ஒரு "நல்ல" என்ற சொல்லை முன்னுக்கு கொடுத்து "நல்ல நண்பர்கள்" என்ற சொல்லை எடுப்போம்..நண்பர்கள் என்றால் எல்லோரும் நண்பர்களில்லை. நண்பர்களில் பல ரகம் உண்டு..கூட இருந்து குழி தோண்டி புதைப்பவனும் இருக்கிறான். தான் கெட்டது காணாம தன் நண்பனையும் கெடுத்து வாழ்பவனும் இருக்கிறான். தான் நொந்தாலும் பரவாயில்ல தன் நண்பனை உயரத்தில வைத்துப் பார்ப்பவனுமிருக்கிறான். இதில "ன்" சேர்த்து எழுதினாலும் ஆண்பால், பெண்பால் இருவருக்குமே பொதுவாகவே எழுதுகிறேன்..

நம்ம அன்பான ஆண்உறவுகள் பாட்டியோடு சண்டைக்கு வரக்கூடாது என்ற நல்ல எண்ணம் தாங்க...

நல்ல நண்பர்கள் வேணும். கட்டாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல நண்பன் வேண்டும். உண்மையான நண்பன் உயிரையும் கொடுப்பான் என்று சொல்லக்கேள்விப்பட்டிருப்போம். ஆம் அது உண்மை. என்னிடம் அதற்கான ஒன்றல்ல இரண்டல்ல நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன.. ..எல்லாம் எழுத முடியாது. இதோ ஒரு உதாரணம்..மட்டும்.


என்னோடு முதலாம் வகுப்பு முதல் படித்த தோழி இன்றும் இலங்கையிலிருந்து கடிதம் போட்டுக்கொண்டு இருக்கின்றார். அட இது என்னது இதை வைத்துக்கொண்டு எப்படிச் சொல்லுவது நல்ல நண்பி என்று யாரும் நினைத்துவிடலாம்.

ஆகையினால் ஒரு சின்னச் சம்பவம். ஒரு முறை இங்கிருந்து தாய்நாட்டிற்குச்சென்று பின்பு எனது ஊரான திருமலையிலிருந்து மீண்டும் கொழும்பு செல்ல வேண்டும்....2 நாள் கழித்து கனடா வருவதற்கு பிளைட். அதிகாலை 4.30 மணிக்கு வான் வந்து வெளிக்கிடும் போது நாட்டில பிரச்சனை.இது ஒன்றும் புதுமையானதல்ல......ஆனால் போகிற வழிமுழுக்க சோதனை என்று இறக்கி ஏற்றுவார்கள்...சந்தேகமிருப்பின் விசாரணை என்று இறக்கி வைத்துவிடுவார்கள். அன்று சுதந்திர தினம் வேறு..டென்ஷனில இருப்பார்கள் ஆமிக்காரர்கள். எனக்கோ சிங்களம் என்ற பாஷை ஆஹா, ஓஹோ என்றளவிற்குத் தெரியவே தெரியாது.....டிறைவருக்குத் தெரியும் இருந்தாலும், காலங்கள் கஷ்டங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை....முதல் நாள் இரவு முழுக்க என் தோழி என்கூடவே வீட்டில தங்கினார். அவ ஒரு கன்னியாஸ்திரி. கிறிஸ்தவ மதங்களை போதிப்பவர். ஆண்டவருக்கே தம் உயிர் என அர்ப்பணித்து வாழும் பெண்.

அன்று அதிகாலை தானாகச் சொன்னார் கொழும்பில குண்டு வெடித்து பல சேதங்கள். இதனால் இன்று நீங்க பயணம் வைப்பது நல்லதல்ல......இருந்தாலும் போய்த்தான் தீரவேண்டும்.......நானும் வருகிறேன் உங்களோடு....என்று.

எனது ஐயாவிற்கும் என் சகோதரிகளுக்கும் அப்பாடா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி.ஏன் என்றால் இப்படியானவர்கள் கூட வந்தால் கொஞ்சம் சேவ்ட்டி. ஆனால் எனக்கோ கொஞ்சமும் விருப்பமில்லை. எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல என் தோழிக்கு ஏதும் ஆகிற்றென்றால் பாவம் அவர்கள் குடும்பம் இவரை நம்பி பிழைக்கும் குடும்பம். தகப்பனும் இல்லை. ம்.....இப்படியான கட்டத்தில் தன் உயிருக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல நானும் கூட வாறேன்....4 வது நாள் திரும்ப வருகிற வான் தானே..என்று எதுவுமே எடுக்கவில்லை. ஒரு போன் போட்டு அவர்கள் தாயிடம் கூறிவிட்டு என்னுடன் கொழும்பு வந்து ஏயாபோட் வரைக்கும் வந்து அது மட்டுமல்ல என் தந்தை இறந்தது கேள்விப்பட்டு என் சகோதரிகளோடு உடன் இருந்து ஆறுதல் சொல்லி அவர்கள் துன்பத்தில் பங்கேற்று , இன்றும் அந்த தூய்மையான உள்ளம், எதையுமே வாய்விட்டு கேட்காத அந்த புனிதமான நட்பு என்ற உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அவர் யாரிடமும் சொல்ல முடியாத வேதனைகளை கசப்பான உண்மைகளை எனக்கு மட்டுமே சொல்லி ஆறுதலடையும் நட்புள்ளம் கொண்ட தூய்மையான உறவு அவர் மனது.

இதனை நினைக்கும் போதெல்லாம் நானும் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.....நல்ல நட்பு எனக்கு கிடைத்ததை எண்ணி.

ஒன்று மட்டும் உண்மை.

நல்ல நண்பர்கள் எமக்கு எப்படி கிடைப்பார்கள்...? எப்படி நாம் அதனை இனங்கண்டு கொள்வது.....? யாரை நம்பி எப்படிப் பழகுவது.......? ஆமாம் இதற்கு எல்லாம் விடைஇருக்கிறது.....எப்படி....????

சிந்தித்துப்பாருங்கள்...நாம நல்லபடியாக நடக்கவேணும். எம்மில்தான் தங்கியுள்ளது. நாங்கள் நல்லபடியாக நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டால் நிச்சயம் எங்களுக்கு நல்ல நண்பர் கிடைத்துவிடுவார்.

நான் சரியாகத்தான் நடந்தேன்.அவன்தான் எனக்குத் துரோகம் செய்து விட்டான் என்றும் வரும்..அதற்கும் எடுத்தவுடன் நாம் எல்லோரையும் நண்பராக்கிக்கொள்கிறோம். ஆனால் எடுத்தவுடன் எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிடமாட்டோம். அதுபோலத்தான் நாம் நல்ல நண்பரோடு பழகினால் அவருடைய எண்ணம் நீங்களாவீர்கள், நாமாவோம். அப்போது புரிந்து கொள்வோம் நம் நல்ல நண்பரை.

கணவனிடத்தில் சொல்லாத கதைகள், மனைவியிடத்தில் சொல்லாத கதைகள் எத்தனையோ விசயங்கள் அத்தனையும் நம்பி ஒரு நண்பனிடத்தில் சொல்லுகிறோம். ஏன்.அதுதான் நண்பன்.

பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களை ரகசியமாக சொல்லிய காலமுண்டு. இப்பொழுது எல்லாம் அப்படியான காலமில்லை. ஆகவே நண்பர்கள் யாராகயிருந்தாலும், பெண்களே உங்கள் ஆண் நம்பரை உங்கள் கணவருக்கு அறிமுகம் செய்யுங்கள். அதுபோல ஆண்களே உங்கள் பெண் நண்பரை உங்கள் மனைவிக்கு அறிமுகம் செய்யுங்கள்.

குட்டிக்கதை....என் கணவர் சொன்னார் தான் கொண்டு போன சாப்பாட்டில் தன் நண்பிக்கும் கொடுத்ததாக (ஏதோ ஒரு நாட்டுக்காரப்பெண்....மறந்துவிட்டேன்...நான்) ஏன் என்றால் அவர் ஹொஸ்பிட்டல் போய் நேராக வேலைக்கு வந்தபடியால உணவு கொண்டுவரவில்லை என்று. நான் சொன்னேன் அதனால் என்ன இனி கொஞ்சம் அதிகமாக சாப்பாடு கொண்டு போங்கோ என்று ஜோக்காக சொல்லி விட்டு நான் கேட்டேன்....உங்களைப்போல நானும் ஒரு ஆண்நண்பருக்கு சாப்பாடு கொடுத்தால் என்ன சொல்லுவீங்க என்று.....

அதற்குச் சொன்னார் அதுதான் நண்பருக்கு என்று சொல்லிவிட்டீங்களே பிறகு இதில நான் சொல்லுறதிற்கு என்னயிருக்கு என்று....

பெருமைக்காக சொல்லவில்லை. இந்தச்சம்பவம் நடந்தபிறகே இதனை எழுதவேண்டும் என்று நினைத்து இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நல்ல மனதோடு நல்ல நண்பரை தேர்ந்தெடுங்க, காசு , பதவி, வசதி இருந்தால்தான் உறவுகள் கூடி, தேடி வருவாங்க......ஆனால் நல்ல நண்பன் எதையுமே எதிர்பார்க்கமாட்டான். அவன் கஸ்டப்படுவான் உங்களிடம் எதிர்பார்க்கமாட்டான். நீங்களாக உணர்ந்து உதவி செய்ய வேண்டும்.
அதையும் எதிர்பார்க்கமாட்டான்.


வாழுங்க நல்ல நண்பர்களோடு நலமாக.

ஆமாங்க ஒரு முக்கியமான விசயம் சொல்லமறந்துட்டேங்க.....மேலே ஒரு வார்த்தை எழுதினேன்....(பெண்களே உங்கள் ஆண் நண்பரை உங்கள் கணவருக்கு அறிமுகம் செய்யுங்கள். அதுபோல ஆண்களே உங்கள் பெண் நண்பரை உங்கள் மனைவிக்கு அறிமுகம் செய்யுங்கள். )

ஆமா இதுதான் இந்த அறிமுகத்தில எந்த வீட்டிலையாவது அகப்பைகாம்பு பதிலாக எதிரொலிக்குமாகயிருந்தால் பாட்டி பொறுப்பல்ல.... .பாட்டி எஸ்கேப்...

டாட்டா..

மீண்டும் ஏதாவது கிளிக்கான உங்களோடு....சந்திக்கிறேன்..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே..
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9453