Tuesday, December 2, 2008

" உடற் பயிற்சி "

சென்ற பொழுதுகளில் "இறப்பு" என்ற சொல்லோடு உங்களைச்சந்தித்தேன்....
இன்று உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் பயிற்சி என்ன என்றதை விளக்குமுகமாக " உடற் பயிற்சி " என்ற சொல்லை தேர்ந்தெடுத்து கூற வந்துள்ளேன்..

நாம் ஆரோக்கியமாக வாழ உணவு மட்டும் முக்கியமானதல்ல...நமது உடலில் தேங்கியிருக்கும், தேவையற்றவற்றை கரைப்பதானால் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. நான் தினமும் வேலை செய்கிறேனே....எனக்கு எதற்கு......? என்று கூறுவோருமுண்டு. நாம் இதைச்செய்வதால் என்ன பலன் என்று அலட்டிக்கொள்வோருமுண்டு...எல்லாவற்றிக்கும் காரணம் நமது மனம்தான். உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றது.

துரித இரத்த ஓட்டம், மூளை இயக்க வேகம் அதிகரித்தல், தசைகளின் இறுக்க நிலை, தேவையற்ற கொழுப்புச்சத்து கரைதல், தன்னநம்பிக்கை வளர்தல், பொலிவான தோற்றம், அதிகமான எடை குறைதல், தேவையற்ற கழிவுப்பொருட்கள் வெளியேறுதல், சோம்பல் இல்லாமை, வயது போனபின் வரும் உபாதைகளை தடுத்தல், சீரான சுவாசம் இப்படிப் பல பல நன்மைகளைப் பெறலாம்.உடல் மெலியவென மாத்திரைகளை நாடுவதும், தம்மைத்தானே வருத்துவதும், கவலையில் வாடுவதும் தேவையற்றதொன்றாகும்.

நம்மால் எந்தளவிற்கு உடற்பயிற்சி செய்யமுடியுமோ அதனை மட்டும் செய்ய வேண்டும்...காலையில் வழமையைவிடத் தினமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக எழுந்து இறுக்கமான உடை அணிந்து, காலுக்கு நல்ல சப்பாத்தும் அணிந்து கொண்டு ஓடுதல் சிறந்த உடற்பயிற்சியாகும்.இதைவிட நீச்சல் தெரிந்திருப்பின் வாரம் ஒரு தடவையாவது நீச்சல் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் உன்னதமானது. வயது போனவர்கள் ஓட முடியாது விட்டால் வேக நடைகூட மிகவும் பலன் தரும்.


உடற் பயிற்சி நிலையங்களைக்கூட வாரம் 3 முறை என நாடலாம். அல்லது வீட்டிலேயே சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் மேலாக விரும்பிய பாடல்களைப்போட்டுவிட்டு ஆடி மகிழ்வதே சிறந்த உடற்பயிற்சியாகும்.நன்றிகள் பிள்ளைகளே..... இதுவரை எழுதியதே அதிகம். அதனால அனைவருக்கும் நல்லபொழுதாக அமையவேண்டி பாட்டி அடுத்த அட்வைசுடன் சந்திக்கிறேன்...



எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். (489)

விளக்கம்:
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

***************************************************
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.