Wednesday, January 14, 2009

"நம்பிக்கை"

சென்ற பதிவில் "நண்பர்கள்" என்ற விடயத்தோடு உங்களைச் சந்தித்தேன். இன்று கிளிக்காகியது. "நம்பிக்கை" என்றதை எழுத வேண்டும் என்று. அதனால உடனே வந்துவிட்டேன்.

" நம்பிக்கை" அப்படி என்றால் என்னங்க..? மனுசன் மேல மனுசன் வைக்கிற நம்பிக்கை. வாங்கிற பொருளில் நாம வைக்கிற நம்பிக்கை. காதலன், காதலிமீதும், கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மனைவி மீதும் அட இரண்டும் சேம் தாங்க மேட்டருக்கு வாங்க என்று யாரோ திட்டித்தீர்ப்பது போல என் ஞானம் சொல்லுறாள். அதுயாருங்க புதிசா ஞானம். அது யாரோ யாருக்குள் யாரோ...பாடல் போலத்தானுங்க..

அதெல்லாம் கடந்ததுதான் "நம்பிக்கை" நாம வைக்க வேணும் நம்பிக்கை அது நம்ம வாழ்விலேதான் இருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையில் வைக்க வேணும். அது எப்படியங்க..?
நாளைய வாழ்வு யாருக்குத்தெரியும்..? விடியும் பொழுது யாருக்குமே தெரியாது. ஆனால் நாம் நம்பிக்கையோடு தூங்கி எழும்புகிறோம். மறுநாள் எழும்புவோம் என்ற நம்பிக்கையோடு. நாளை அந்த வேலை, இந்த வேலை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை எமக்குள் யாரும் சொல்லாமலே எமக்குள் ஏற்படுக்கின்ற நம்பிக்கையது.

இதெல்லாம் கடந்து நாம கடவுளிடத்தில வைக்கிறோம் நம்பிக்கை. எந்த மதமாகயிருந்தாலும் அந்தந்த சீசனுக்கு அவரவர் தெய்வங்களுக்கு எப்படியெல்லாமோ தம்மை அன்போடு வருத்தி நோன்புயிருந்து ஏதோ ஒரு வகையில தனக்கு நல்லது நடக்கவேணும், தன் குடும்பத்திற்கு நல்லது நடக்கவேணும் என்றெல்லாம் மனுசன் நம்பிக்கை வைக்கிறான்.

அதுவும், மற்றவரையும், தன்னையும் பாதிக்காதவகையில அதுவும் நல்லதுதான். இதற்கு உதாரணமாக ஒரு கதை. என்னோட அநுபவமில்லையப்பா. எங்கையோ எப்போதோ படிச்ச அநுபவம். யாவரும் அறிந்த கதையும் கூட.

பெரிய சபையின் நடுவே பாஞ்சாலியின் சேலையை அப்படியே துச்சாதணன் துகிலுரிகிறார். அப்போது பஞ்சாலி ஐயோ, ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தி கதறுகிறாள். அங்க பாருங்க ஆயிரக்கணக்கானவர்கள், அதில மேதாவிகள், அரசர்கள், பஞ்சாலியின் கணவர்மார்கள் எல்லோரும் இருக்க ஒரு பெண்ணுக்கு சேலை உரியும் போது எவ்வளவு அவமானம். அந்த நேரத்தில ஏன் உடனே கண்ணன் உதவி புரியவில்லை. பஞ்சாலி பேர் சொல்லி கூப்பிடும் வரையில ஏன் அட்டேன்ஷனில இருந்தார்..? யோசிச்சுப்பாருங்க..

ஏன் என்றால் அப்போது பஞ்சாலி தன் மானத்தை இருகைகளாலும் பொத்திக் கொண்டு இருந்து கத்தியிருக்கிறாள்.( நான் பார்த்தனாக்கும் என்று கேட்டுவிடாதீர்கள்..) கண்ணன் என்ன நினைச்சிருக்கிறார். அட அவளுக்கு நம்பிக்கையிருக்கு..தன் மானத்தை தான் காப்பாற்றுவேன் என்று.....அதனால அவரும் பார்வையாளர்களோடு இருந்துவிட்டார். அப்புறமா பாருங்க பாஞ்சாலி கண்ணா கண்ணா என இரண்டு கைகளையும் மேலே தூக்கி கத்தியிருக்கிறாள். அது எதனால கண்ணன் மேலயிருந்த நம்பிக்கையினால. தன்னையும் மறந்து ஆண்டவனிடத்தில முழு நம்பிக்கை வைக்க....( இப்பவுள்ள படத்தில, ஹீரோயினி ஊட்டியிலயிருந்து கண்ணா, கண்ணா என்று கத்தினால் ஹீரோ மதுரையிலிருந்து பல்ட்டி அடிச்சே ஒரு செக்கனில வந்திடுவார்.. )

ம்.....ரொம்ப ஸ்பீடா அந்தச் சேலை அவள் மானத்தைக் காக்க இப்பவுள்ள நாக்க மூக்க பாடல் ஸ்பீடுபோல குசேலன் சேலை, ரம்பா சேலை, பவனா சில்க் சேலை இப்படியாக தொடரா கலர் கலரா வந்திச்சு. (நிஜவாழ்க்கையில இப்படி நடக்குமாங்க..??? ம்ஹும் ச்சான்சேயில்ல.. )(துச்சாதணன் எதற்கு இப்படி திரெளபதியை ஆயிரக்கணக்கானோர் மத்தியில இப்படிக் கேவலப்படுத்தினார் என்றதிற்குக் கூட கதையிருக்கு. அதை இதற்குள் ஜொயின்ட் பண்ணினால் அப்புறம் நம்பிக்கை சப்ஜெக்ட் மாறிப்போயிடுமுங்க. அதனால அதை வேறு ஒரு பொழுது பார்த்துக்கொள்வோம்.)

பாருங்க நாம முழு மனதோடு நம்பவேணும். நம்பிக்கைவேணும். நிச்சயம் அது பிரதிபலிக்கும். நாம சாதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதிலும் பார்க்க செயலாற்றிக்கொண்டுடிருந்தால் அதில் நாம வைக்கும் முழு நம்பிக்கை வீண்போகாது.. எல்லாமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலதான் வாழுறோம். நாளைய நாளே நம்பிக்கையில்தானுங்க...

அப்புறம் இந்த நம்பிக்கைக்கு இன்னொரு உதாரணம்.

யாருக்காவது போர் அடிச்சா தயவு செய்து எடுத்துச் சொல்லுங்க....என்னை நானே மாற்றியமைச்சு எழுத முயற்சி செய்வேனுங்க..ம்.....கதைக்கு வருகிறேன்..

நடு ரோட்டில ஒரு பெரிய அக்ஸிடென்ட்...அந்த பஸ்சில வந்தவங்க பாதிக்கு மேற்பட்டவங்க இறந்திட்டாங்க....அங்க வந்த உதவிப்பிரிவினர் அரைகுறையாகயிருந்த உயிரோடிருந்தவங்கள மட்டும் தூக்கி ஆம்புலன்சில ஏற்றி அது வெளிக்கிட்டுப் போக ஆயத்தம். அப்ப பார்த்து ஒரு மனுசனை இவங்க இறந்திட்டாரு என்று விட்டிட்டுப் போன அவரு எழும்பி நின்று தன் சேர்டைக் கழற்றி தலையில கட்டுப்போட்டு கத்தியிருக்கிறாரு......( படக்கதையில்லங்க.நிஜக்கதை) உடனே அவரு காப்பாற்றப்பட்டார்...அவருக்குள்ள நம்பிக்கை தன்உயிரையே காப்பாற்றவைத்தது. இதுபோல 2 கைகளையும் இழந்த பெண், கால்களை இழந்தவங்க, இன்னும் நிறையப்பேர் யூனீயரிலிருந்து சீனியர் வரைக்கும் இப்படிப் பல பேர்களுடைய வாழ்க்கை எனும் சக்கரம் சுழன்று கொண்டிருப்பதே தளராத "நம்பிக்கை" யின் அடிப்படையில் தானுங்க..

ஆகவே நம்புங்க...வாழ்க்கையில துன்பம் வரும்போது ஏற்றுக்கொள்ளுங்க...அது கூட அநுபவத்திற்கு ஒரு பாடம்..இன்பம் வரும்போது மகிழ்ந்திருங்க...அடச்சே என்னடா வாழ்க்கை என்று எண்ணாதீங்க...நம்பிக்கையோடு வாழுங்க...வளமான வாழ்வு உங்கள் அருகில்தானுங்க.

அதுவரை டாட்டா
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9514

No comments: