Wednesday, November 12, 2008

" சந்தேகம்"

வாங்கோ பிள்ளைகளே....எல்லோரும் நலம்தானே...

ஏதோ வயசுபோன காலத்தில என் மூளையில இருக்கிற கொஞ்ச அட்வைசுகளை உங்களுக்கும் சொல்லலாம் என்றுதான் பொடி நடையாய் வந்திருக்கிறேன் கண்டியளோ..

ஏதோ இருக்கிற காலம் வரைக்கும் முடிஞ்சதை எடுத்து எழுதுறன் பாருங்கோ.. ..யாருக்காச்சும் இதில தப்பு துப்பு என்று இருந்தால் பாட்டியை பெருமனதோடு மன்னிச்சு மேட்டரை டப்புன்னு சொல்லிடுங்கோ...சரியோ....பிள்ளைகள்.

இன்றைக்கு " சந்தேகம் " எனறதை பற்றி சொல்லுறன்.

இது பாருங்கோ ஒரு பொல்லாத நோய். தானா வரும், மற்றவர்களின் கோல்மூட்டலாளும் வரும்.
இதனை மனதிற்குள் வச்சுக்கொண்டு சதா அதையே பற்றி யோசிப்பதால எதுவுமே முற்றுப்பெறாது.
நாம உடனே நமக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை தீர்த்து செயல்பட முன்வரவேண்டும். எடுத்தேன் கவுத்தேன் என்று தடாம், புடாம் என்று மற்றவர்கள் மனதை நோகப்படுத்தி சந்தேகத்தை தீர்ப்பது கூடாது.

யாருடைய மனதும் பாதிக்காத வகையில ஆறுதலாக எடுத்துச்சொல்லி...அன்பாகப்பேசி தீரவிசாரிக்கவேண்டும். நமக்கு ஏற்பட்டிருக்கும் நோயிற்கு வைத்தியரை நாடுவது போல நாமும் சம்மந்தப்பட்டவரையோ., அல்லது வீட்டில இருக்கும் பெரியவர்களையோ மதித்து இதனை பேசி தீர்க்கவேண்டும். நோயை வளர விட்டால் கேடு நமக்குத்தான் பாருங்கோ.

இந்த தீ யை அணைக்காவிட்டால்...என்ன நடக்கும்....ஒரு மூலையில் பிடிச்ச தீ..வீட்டையை அழித்துவிடுமல்லோ..

சரி...சரி...இனி வசதிப்படும்போது வாறன்...வந்து இன்னொரு அட்வைஸ் சொல்லுறன் சரியோ...அதுவரைக்கும்..பாட்டி என்றும் உங்களுடன்.


சந்தேகம் என்பது ஒரு தீ
அதை தீர்க்காவிட்டால் உன் கெதி அதோ கெதி.

சரி பிள்ளைகளே " விடிகின்ற பொழுது எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும் "

அப்ப நான் போயிட்டு வாறன்...தட்டா...எல்லோருக்கும்..

No comments: